செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 3 September 2018

இயற்கை காதல்!

இயற்கை காதல்!

கார்மேகமே கடந்து செல்லாதே,
மேகம் உடைத்து பசுமை செய்!

நதி நீரே வேகமாய் பாயாதே,
வரப்புகளில் புகுந்து பாசனம் செய்!

தென்றல் காற்றே வீசிச் செல்லாதே!
பூவின் மகரந்தம் கடத்தி
சேர்க்கை செய்!

அயராத பறவைகளே பறந்து செல்லாதே!
வழிநெடுக எச்சமிட்டு மரம் இடச்செய்!

மண்புழுக்களே சும்மா இருக்காதே,
நிலம் தழைக்கும் உரம் கிடைக்கச்செய்!

செழித்த மரங்களே தூங்கி நிற்காதே,
உன்னில் தஞ்சம் புகுவோர்க்கு இடம் செய்!

மண்ணே மயங்கி இருக்காதே,
உழுபவனின் ஆசைப்படி பயிர் செய்!

ஆசையின் அளவில்லாத பற்றினால், வழிமாறிப்போன மனித இனம்!
மனம் மாறிவிடும் மீண்டும் ஒருமுறை இயற்கையை பார்த்தால்!

-செல்வா



No comments:

Post a Comment