காதல் கண்ணே!
இழப்பதற்கு ஒன்றுமில்லை இனி கண்ணே!
என்னை உன்னில் தொலைத்திட்டேன் கண்ணே!
கிரகணம் வந்ததுபோல் மறைந்திட்டாய் கண்ணே!
உன் மனதில் ஒளிந்திருக்க ஆசையே கண்ணே!
இளமை உன்னை கண்டு வியந்தது நிற்கிறது கண்ணே!
முதுமை வரை இணைந்து வாழ்வோம் வா கண்ணே!
பழம் கனிய நாள் பிடிக்கும் என அறிவேன்!
மனம் கனிய நாள் பிடிக்கும் என இன்று அறிவேன்!
உந்தன் நினைவுகளால் அனுதினமும் நோயுற்றவன் ஆகிறேன்!
மழைத்துளி மண்ணை முத்தமிட்டு வளப்படுத்துவதைப்போல், என் காதல் நோயை உன் முத்தத்தால் தீர்தகற்று!
மருத்துவ முத்தத்தால் என் துயர் துடை கண்ணே!
செவிலிய கரத்தால் என் இடர் களை கண்ணே!
உயிரும் உணர்வும் நீ காற்றிரைப்பாய் என காத்திருக்கிறது!
சுவாசம் தா, இருவரும் சுவாசிப்போம்!
-செல்வா
இழப்பதற்கு ஒன்றுமில்லை இனி கண்ணே!
என்னை உன்னில் தொலைத்திட்டேன் கண்ணே!
கிரகணம் வந்ததுபோல் மறைந்திட்டாய் கண்ணே!
உன் மனதில் ஒளிந்திருக்க ஆசையே கண்ணே!
இளமை உன்னை கண்டு வியந்தது நிற்கிறது கண்ணே!
முதுமை வரை இணைந்து வாழ்வோம் வா கண்ணே!
பழம் கனிய நாள் பிடிக்கும் என அறிவேன்!
மனம் கனிய நாள் பிடிக்கும் என இன்று அறிவேன்!
உந்தன் நினைவுகளால் அனுதினமும் நோயுற்றவன் ஆகிறேன்!
மழைத்துளி மண்ணை முத்தமிட்டு வளப்படுத்துவதைப்போல், என் காதல் நோயை உன் முத்தத்தால் தீர்தகற்று!
மருத்துவ முத்தத்தால் என் துயர் துடை கண்ணே!
செவிலிய கரத்தால் என் இடர் களை கண்ணே!
உயிரும் உணர்வும் நீ காற்றிரைப்பாய் என காத்திருக்கிறது!
சுவாசம் தா, இருவரும் சுவாசிப்போம்!
-செல்வா

No comments:
Post a Comment