செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 8 September 2018

அன்பின் வழியது!

அன்பின் வழியது!

அன்பின் வழியது யாது எனில்?
அமைதியாய் ஆரவாரமற்றது,
இனியதாய் இதமானது,
இயலாதவருக்கு ஈவது,
வாழும் வாழ்க்கையில் மனிதன் முயலும்,
ஓர் குணமாக இதுஒவ்வொரு நாளும் அமைய வேண்டும்!

காந்தி தன் வாழ்வில் காண்பித்தது,
அன்னை தெரசா வாழ்வாக வாழ்ந்தது,
இன்னும் பலரின் வழியது அன்பு!

அன்னையின் கருணை,
தந்தையின் உழைப்பு,
சகோதரியின் பாசம்,
உற்றாரின் அக்கறை,
நண்பனின் நேசம்,
முகம்தெரியாதவரின் நேயம்,
இதன்வழி அன்பு பாய்கிறது!

அகந்தையைவிட்டால் கண்ணில் தெரியும்!
தற்பெருமை குறைந்தால் காதில் ஒலிக்கும்!
அடுத்தவர் இடத்தில் அமர்ந்தால் மனம் உணரும்! 
இப்புவியின் உயர்ந்த அறம்தனை பயில்வோம்!
நிறைவாய் வாழ்ந்து மகிழ்வாய் இருப்போம்! 

இனிய தமிழ் செல்வா, ஓமன் 

No comments:

Post a Comment