செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 18 September 2018

சொற்கள்!

சொற்கள்!

சொற்கள் குலைவாய் இருப்பின் அன்பை கூட்டும்!
சொற்கள் நெகிழ்வாய் இருப்பின் மதிப்பை பெருக்கும்!
சொற்கள் கனிவாய் இருப்பின் உள்ளத்தினை சேரும்!
சொற்கள் கடினமாக இருப்பின் உறவை உடைக்கும்!
சொற்கள் கோபமாக இருப்பின் நட்பை சிதைக்கும்!
சொற்கள் சாந்தமாக இருப்பின் அமைதியை தரும்!
சொற்கள் இதமாக இருப்பின் ஆறுதல் தரும்!
சொற்கள் இனிமையாய் இருப்பின் வெற்றி வரும்!
சொற்கள் தமிழாக இருப்பின் தமிழுக்கு அணிசேரும்!

நாளும் உதடு உதிர்க்கும் சொல்லே,
நமது எதிரியையும், நண்பரையும் தேடித்தரும்!
எதற்கும் சல்லடை இல்லை எனில் தொல்லையில்லை!
சொற்களை சல்லடையில் சலித்து பேசுக!
வாய்மொழி சிறப்பின் வையகம் நமதே!

-செல்வா

No comments:

Post a Comment