செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 27 September 2018

பாதியில் முறிந்த பயணம்!

பாதியில் முறிந்த பயணம்!

பாதையறியா பயணங்கள் கூட முடிவுறும்!
மனிதன் மாண்பு தவறிய பயணம் பாதியிலே முறியும்!

உணர்வறியா உறவினால் காதல் முறியும்!
மதிப்பறியா மனதினால் உறவு முறியும்!
கேடுகெட்ட மதியினால் நட்பு முறியும்!
சூட்சம புத்தியினால் சுற்றம் முறியும்!

வழியறியா பயணம் பல உண்டு வாழ்வில்!
அதை கடந்து சென்றால் வெற்றி!
தடுக்கி நின்றால் அனுபவம்!
சிலிர்த்து நின்றால் ஆர்வம்!
சோர்ந்து தங்கினால் தோல்வி!
முறிந்து போகும் பயணம் முற்றிடுவதில்லை!

சினம் காத்து, நாவடக்கி திட்பம் சரியாக அமைவின் எப்பயணமும் நில்லா!
அப்படியேனும் நிற்பின் அதற்கான விடை காலத்திடம் உண்டு!
கனியும் காலத்திடம் கணக்கும் உண்டு!

விடை நோக்கி காத்திருப்போம்!

-செல்வா

No comments:

Post a Comment