செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 18 August 2018

நட்சத்திரம் விழும் இரவு!

நட்சத்திரம் விழும் இரவு!

துணை தேடி காத்திருந்தேன்!
உன் விழி தேடி காத்திருந்தேன்!
இணையாக நீ இல்லாத பொழுதில்,
காண்பதெல்லாம் மாயமா என்ன?

காண்பதற்கு இதமாய் ஒளிரும் நிலா!
நிலவின் தோழிகள் போல் நட்சத்திரம்!
மௌனமே மையல் கொண்ட  இரவு!
உன் வாசம் வீசிச் செல்லும் தென்றல்!
உன் கைப்பற்ற துடிக்கும் இரு கரங்கள்!
வரவேற்பு எண்ணித்தவிக்கும் மனது!
இவையனைத்தும் சேர்ந்தது நட்சத்திரம் விழும் இரவல்லவா!

தாமதித்து போனால் அவைகள் கூக்குரலிடும்!
மெய் தீண்டி நினைவூட்ட பனி தென்றலாய் வரும்!
பக்குவமாய் எடுத்துக்கூற வண்டுகள் பவனி வரும்!
வா அன்பே வா! வந்திடு வா!

நட்சத்திரம் ஏக்கத்தில் விழுந்துவிடும் முன் வா!
நிலா ஒளி தராமல் கோபம் கொள்ளும் முன் வா!
காற்று சத்தமிட்டு வீசிடும் முன்வா!

இந்த இரவினை இன்னமும் நீட்டுவோம்!
நட்சத்திரம் விழும் இரவில் தாளம் மீட்டுவோம்!
புதிய கீதம் இசைத்து ஒன்றாய் ஒலிப்போம்!
காதல் ஒலிக்கட்டும்! அவள் காதில் ஒலிக்கட்டும்!

-செல்வா

No comments:

Post a Comment