மன்னிப்பாயா?
நட்பென்னும் பந்தலில் விரிசல் விட்டு நீர் சொட்டக் கண்டேன்!
கசியும் நீர் தெருவெல்லாம் வழிந்தோடக்கண்டேன்!
நேற்றுவரை சிரித்து மகிழ்ந்த நெஞ்சம் வாடக்கண்டேன்!
கொடி படர்ந்த பந்தலிலே விச பாம்பினால் விரிசல் வந்ததோ?
இல்லை வழிபோக்கு காகமிட்ட முள்ளினால் விரிசல் வந்ததோ?
பார்த்த விசயங்கள் கண்களுக்கு அப்பாலே!
கேட்ட விசயங்கள் காதுகளுக்கு அப்பாலே!
என விவரம் அறிந்து பேசமால், ஆத்திரத்தில் வந்த கோபம் வாகை சூடிக்கொண்டதே!
நாளோடு மெருகும் நட்பு நடைமிதியாய் போனது!
போனது திரும்பாது, இன்றோ நான் உணர்கிறேன் பிழையை!
திருந்த ஓர் வாய்ப்பளிப்பாயா!
நட்பென்னும் பந்தலை இருகரம் கொண்டு தைத்திடுவோம்!
ஒருமுறை மன்னிப்பாயா!
மன்னிப்பாயா?

No comments:
Post a Comment