செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 12 October 2018

விசித்திர மனிதர்கள்!

விசித்திர மனிதர்கள்!

இவ்வளவு சுயநலமாகியதா மனிதவாழ்வு?
இரக்கம் கொண்ட மனிதர்கள் அற்ப சொற்பம் தானா?

இன்றளவில் இரக்கம் குடும்பத்தினர் மத்தியிலே கூட இல்லை என்றாகின!
அக்கறை கொண்ட பால்ய உறவுகள் கூட பணத்தின் பெயரால் பகைத்து நிற்கின்றன!

பகைவன் கூட நம் வளர்ச்சியில் ஆர்வப்படுவார் ஆனால் பக்கத்து வீட்டுகாரரிடம் அதுஇல்லை!
நான் எனது என்ற குறுகிய வட்டத்தில் சுழலும் இயந்திரமாகின மனித வாழ்வு!

ஓடும் ஓட்டத்தில் வழியில் காணும் வித்தைகளில் சற்று இளைப்பாறி இதுதான் வாழ்வாகின!
பொருட்களை சேர்க்கின்ற வேகத்தில் சில மனிதனை கூட சம்பாதிக்க முடியாமல் போகின்றன!

உலகமயமாதலினால் ஒருவன் வைத்திருக்கும் பொருளே அவனது மதிப்பு என்றாகின!
ஒரு வெள்ளத்தில் பொருட்கள் அடித்துச்சென்றால் எல்லோரும் சமமே!

சேர்ப்பதை இதயமாகவும், சேமிப்பை முதலிடாகவும் செய்யின் எதிர்காலம்
இரக்கமான காலமாக தோன்றும்...

நாளும் சிந்திப்போம் நல்மனிதனாக இருப்போம்...

-செல்வா





No comments:

Post a Comment