செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 16 October 2018

எதிர்பார்ப்பு!

எதிர்பார்ப்பு!

வாழ்க்கை முன்னேறும் என்பதே நாளும் உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்பு!
கல்வி வாழ்க்கையில் உயர்த்தும் என்பதே ஏழை குடிமக்களின் எதிர்பார்ப்பு!

வெளிநாட்டில் வேலை செய்து விரைவில் கடன், கடமைகளை அடைப்பதே பரதேசியின் எதிர்பார்ப்பு!
ஆசை பட்ட எல்லாவற்றையும் அழுது வாங்கிவிடலாம் என்பதே குழந்தையின் எதிர்பார்ப்பு!

எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்வில்லை யாருக்கும்!
எதிர்பார்ப்பு பலிக்க செய்யும் முதலீடு தெரியவில்லை பலருக்கும்!

உழைக்காமல் இருந்தால் முன்னேற்றமில்லை!
கற்காமல் இருந்தால் உயர்வில்லை!
துயில் எழாமல் இருந்தால் எழுச்சியில்லை!
சேமிக்காமல் இருந்தால் செல்வமில்லை!

எதிர்பார்ப்பு பலிப்பது நம் கையிலே!
அதை சிலர் உழைப்பு என்பர், சிலர் புண்ணியம் என்பர்,
இன்னும் பலர் அதிர்ஷ்டம் என்பர்!
எது எப்படியாகினும் உனது முயற்சியே உனது எதிர்பார்ப்பை நிறைவேற்றும் கருவியாகும்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா


No comments:

Post a Comment