செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 10 October 2018

குறையில்லா மனிதன்!

குறையில்லா மனிதன்!

குறையில்லா மனிதன் உண்டா இவ்வுலகில்?
நம் எதிரில் உள்ளவர் குறையில்லாதவரே நமக்கு!
நாம் அடுத்தவர் தட்டையே எப்பொழுதும் நோக்குகிறோம்!
நமது தட்டை நாம் எப்போது பார்க்கின்றோமோ,
அன்றிலிருந்து குறையில்லை, ஏனென்றால் நம்முடையதோ அக்ஷயபாத்திரம்!

எதுவாகினும் அது நம்மிலிருந்து துவங்குகிறது!
நமது எண்ணம் எப்படியோ அதுவே நமது சூழ்நிலை!
நமது சூழ்நிலை எப்படியோ அதுவே நமது செயல்!
நமது செயல் எப்படியோ
அதுவே நமது வெற்றி!

தடைகள் தடையாகவும் இருக்கலாம்!
தடைகள் சவால்களாகவும் பார்க்கலாம்!
தடையாக தோன்றின் சோகyம், தோல்வியாய் முடியும்!
சவாலாக தோன்றின் உற்சாகம், வெற்றியாய் முடியும்!

விழி திறப்பின்,வழி பிறக்கும்! 
விழி திறப்பின்,ஒளி பிறக்கும்! 
வாகை சூடுவோம் மனக்கண் மார்க்கமாக!

-செல்வா

No comments:

Post a Comment