செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 22 October 2018

எண்ணம் போல் வாழ்வு!

எண்ணம் போல் வாழ்வு!

ஒருவருக்கு எண்ணம் திடமெனில்,
அந்தியும் தலை சாய்க்கும்,
ஆகாயமும் நீர் சுரக்கும்,
இமயமும் ஏற இடம் தரும்,
ஈர மண் சிற்பமாய் மாறும்,

உலகில் முன்னேற்றம் வரும்,
ஊழ் முயற்சி வெற்றி பெரும்,
எண்ணம் போல் நிறைவேறும்,
ஏணி போல் வாழ்வு உயரும்,

ஐயமின்றி வாழ்வு மிளிரும்,
ஒன்று பட்ட முயற்சி கைகூடும்,
ஓடி உழைத்த பலன் கிடைக்கும்,
ஔவை கூற வில்லை, இது வாழ்வின் அனுபவம்,
அஃதே எண்ணம் இருப்பின் வாழ்வு வளமே!

-செல்வா

No comments:

Post a Comment