இடைவெளி!
பிறப்பிற்கும் இறப்பிற்கும்மான இடைவெளி வாழ்க்கை!
இருப்பதோ எண்ணிவிடும் நாட்கள் இவ்வுலகில்!
இதில் எத்தனை சண்டைகள் எத்தனை வேற்றுமைகள்!
மனிதன் பறந்து திரியவே பெரிய உலகம் வைத்தான் இறைவன்!
மனிதனோ தனக்கொரு சாதி, மதம் என கூட்டம் கண்டு தேங்கலானான்!
அதில் அவன் பெருமை இருப்பதாய் உணர்ந்தும் கொள்கிறான்!
சாதிகளை சாலையிலே விட்டு விடவும்,
மதங்களை வீட்டின் மதில் சுவரில் விட்டு விடவும்,
சற்று எட்டிப்பாருங்கள் மனித நேயத்துடன்,
பிறர் போற்றும் படி வாழ்வு வாழ வேண்டும்,
வாழையடி வாழையாய் நம்மை யாவரும் வாழ்த்த வேண்டும்!
இப்படி ஓர் வாழ்வை ஓவ்வொருவரும் வாழத்துடித்தால்!
அந்த இறையும் இறங்கி வந்து வேடிக்கைபார்ப்பார்!
வா தோழா வா, நாளை நமதே!
-செல்வா
பிறப்பிற்கும் இறப்பிற்கும்மான இடைவெளி வாழ்க்கை!
இருப்பதோ எண்ணிவிடும் நாட்கள் இவ்வுலகில்!
இதில் எத்தனை சண்டைகள் எத்தனை வேற்றுமைகள்!
மனிதன் பறந்து திரியவே பெரிய உலகம் வைத்தான் இறைவன்!
மனிதனோ தனக்கொரு சாதி, மதம் என கூட்டம் கண்டு தேங்கலானான்!
அதில் அவன் பெருமை இருப்பதாய் உணர்ந்தும் கொள்கிறான்!
சாதிகளை சாலையிலே விட்டு விடவும்,
மதங்களை வீட்டின் மதில் சுவரில் விட்டு விடவும்,
சற்று எட்டிப்பாருங்கள் மனித நேயத்துடன்,
பிறர் போற்றும் படி வாழ்வு வாழ வேண்டும்,
வாழையடி வாழையாய் நம்மை யாவரும் வாழ்த்த வேண்டும்!
இப்படி ஓர் வாழ்வை ஓவ்வொருவரும் வாழத்துடித்தால்!
அந்த இறையும் இறங்கி வந்து வேடிக்கைபார்ப்பார்!
வா தோழா வா, நாளை நமதே!
-செல்வா

No comments:
Post a Comment