செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 31 May 2018

வாழ்க்கை!

வாழ்க்கை ஓர் அரிய பொக்கிஷம்!
அதன் ஒவ்வொரு நாளும் நம்வசம்!

வாழ்க்கையில் தென்றல் காற்றாக இருப்போமாக!
மற்றவர் இதமாக உணர்ந்துகொள்ள!
வாழ்க்கையில் தீபமாக இருப்போமாக!
பாதைக்கு வெளிச்சமாய் பிறர் பயணிக்க!
வாழ்க்கையில் நீராக இருப்போமாக!
பிறபொருள் விளைந்து, தானும் ஓர் உணவாக பயன்தர!
வாழ்க்கையில் மரமாக இருப்போமாக!
நல்ல காய், கனி, நிழல் மற்றும் பல்பொருளாய் பயன்தர!
வாழ்க்கையில் ஒரு புத்தகமாக இருப்போமாக!
பிறர் பயின்று அவர்கள் வாழ்வு சிறப்புற!!!

உன்னால் முடியும் என்று ஒருவர் கூறினால், 
அனைவருக்கும் புது உலகம் படைக்கும் துணிவு வரும்!

தினம் தினம் புதுமை படைத்திடுவோம்,
நமது சிந்தனையால், பேச்சால், செயலால்!

நாளை நமது கையில் தான், 
இன்று நம்சிந்தனை இலக்கை நோக்கி இருக்கப்பெறின்!!!

விழி.எழு.விருட்சமாகுக

-செல்வா




No comments:

Post a Comment