செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 4 June 2018

பண்பின் உன்னதம்!!!

வாழ்வில் நன்றாக பயணிக்க பல்லக்கு தேவையில்லை!
நம் இன்பத்தை இரட்டிப்பாக்கவும், துன்பத்தை பங்கிடவும்,

உற்றவர்கள் இருந்தால் போதுமடா...

சிறிய வீட்டில் வசித்த மகிழ்ச்சியை பளிங்கு மாளிகை தருவதில்லை!
அறைகள் அதிகமாவதால் மனதின் தூரமும் அதிகமாகிவிடுகிறது!
பழைய சோற்றின் சுவை மற்றும் சத்தை, பிட்சா ஒருபோதும் தரமுடியாது!

அப்பா, அம்மாவின் உழைப்பையும், கஷ்டத்தையும்,
பார்த்து வளர்பவர்களுக்கு செலவு கம்மிதான்!
அத்தியாவசியத்திற்கும், அனாவசியத்திற்கும்
இடையில் இருக்கிறது சேமிப்பு!

சேமிப்பு என்பது எதிர்காலத்தை நோக்கிய அச்சமில்லை, உபாயம்!
அது ஓட்டத்தின் இடையில் களைப்பை போக்க உதவும் தெம்பு பானம்!

பூச்சியத்திலிருந்து ஒன்றாய் உருவாகிவிட்டால், பத்து, நூறு,
ஆயிரம், இலட்சம், கோடியாய் பெருகும் காலம் தூரமில்லை!

எல்லோருக்கும், எல்லோரின் உயர்விற்கும் ஒன்றே,
முழுமூலக்காரணம் அது உழைப்பே!
உறுதியாய் உழைப்போம்!
வானம் தூரமில்லை!


விழி! எழு! விருட்சமாகுக!!!

-செல்வா


No comments:

Post a Comment