உங்களுடைய நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்!
பெரியவர்களின் ஆசீர்வாதங்களோடும்,
சிறியவர்களின் பிரார்த்தனைகளோடும்!
இந்தியா மட்டும் வேற்றுமையில் ஒற்றுமைக்கு,
எடுத்துக்காட்டில்லை, நல்இல்லறமும் தான்!
இங்கு மதம், இனம், சுற்றம் ஒன்றாக இருக்கலாம்,
விருப்பங்கள் வேறாகவும், வெறுப்புகள் வேறாகவும் இருக்கலாம்!
மதிப்பளியுங்கள் தனி மனிதருக்கு!
விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதும்,
கெட்டுப்போனவர்கள் விட்டுக்கொடுத்ததில்லை என்பதும்,
பழமொழியும், எடுத்துக்காட்டும்!
நாட்டிற்கான நல்ல குடிமகன், வீட்டிற்கான நல்ல தலைமகன்!
பிறப்பது உங்களிடம் தான்! நல்இல்லறத்தில் தான்!
வளர்வது உங்களுடைய பண்புகளினால் தான்!
ஒவ்வொரு திருமணமும் இந்நாட்டின் இறையாண்மையை மீண்டும் உறுதி செய்கிறது!
நற்குடிமகன்கள் பிறந்து நாட்டை, வளமாக வழி நடத்துவார்கள் எனும் நம்பிக்கையில்!
மனதிற்க்கான இடைவெளி குறைந்து!
மன்னிப்பிற்கான மனவெளி மிகுந்து!
புன்னகையின் இலக்கணமாய்!
நல்ல பூந்தோட்டமாய் உங்கள் வாழ்வும்,
அதன் நலனும், சிறந்த பலனுமாய்,
பல்கி பெருகிட நல்வாழ்த்துக்கள்...
இருமனம் இணைந்த இன்பமான நாளாய்,
எந்நாளும் அமைய எங்கள் வாழ்த்துக்கள்!
-செல்வா
பெரியவர்களின் ஆசீர்வாதங்களோடும்,
சிறியவர்களின் பிரார்த்தனைகளோடும்!
இந்தியா மட்டும் வேற்றுமையில் ஒற்றுமைக்கு,
எடுத்துக்காட்டில்லை, நல்இல்லறமும் தான்!
இங்கு மதம், இனம், சுற்றம் ஒன்றாக இருக்கலாம்,
விருப்பங்கள் வேறாகவும், வெறுப்புகள் வேறாகவும் இருக்கலாம்!
மதிப்பளியுங்கள் தனி மனிதருக்கு!
விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதும்,
கெட்டுப்போனவர்கள் விட்டுக்கொடுத்ததில்லை என்பதும்,
பழமொழியும், எடுத்துக்காட்டும்!
நாட்டிற்கான நல்ல குடிமகன், வீட்டிற்கான நல்ல தலைமகன்!
பிறப்பது உங்களிடம் தான்! நல்இல்லறத்தில் தான்!
வளர்வது உங்களுடைய பண்புகளினால் தான்!
ஒவ்வொரு திருமணமும் இந்நாட்டின் இறையாண்மையை மீண்டும் உறுதி செய்கிறது!
நற்குடிமகன்கள் பிறந்து நாட்டை, வளமாக வழி நடத்துவார்கள் எனும் நம்பிக்கையில்!
மனதிற்க்கான இடைவெளி குறைந்து!
மன்னிப்பிற்கான மனவெளி மிகுந்து!
புன்னகையின் இலக்கணமாய்!
நல்ல பூந்தோட்டமாய் உங்கள் வாழ்வும்,
அதன் நலனும், சிறந்த பலனுமாய்,
பல்கி பெருகிட நல்வாழ்த்துக்கள்...
இருமனம் இணைந்த இன்பமான நாளாய்,
எந்நாளும் அமைய எங்கள் வாழ்த்துக்கள்!
-செல்வா

No comments:
Post a Comment