செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 29 June 2018

நாடோடி முதல் நாகரீகம் வரை!

நாடோடி முதல் நாகரீகம் வரை!

நாடோடி மனித குலத்தோன்றலின் முதன்மை முயிற்சி!
ஓர் இடம் விட்டு இடம் பெயரும் வயிற்றிர்க்கான ஓட்டம்!
நாகரீகம் வளர்ந்தது! வேளாண்மை பிறந்தது!
மனிதன் வசிக்களானான்!

பயிர் வளர்ந்தது!
வயிறு நிறைந்தது!
கற்காலம் பிறந்தது!
கல் ஆயுதங்கள் பிறந்தது!
கல்லை உரச பொறி பிறந்தது!
நாகரீகம் மேன் மேலும் வளர்ந்தது!

பொறியின் பயன் நெருப்பாயின!
நெருப்பின் பயன் சுட்ட உணவாயின!
நெருப்பின் உபயோகம் வளர்ந்து பயனாகின!
மனிதனுக்கு உலோகம் பெரும் உதவியாகின!

உலோகக் காலம் மலர்ந்தன!
பித்தளை முதல் மற்றவை என!
ஒன்றுக்கிரண்டாய் உலோகம் பெருகின!
தனிமனிதன் கூட்டமாகினான்!
குழு,கூட்டம் சமுதாயமாகின!

சமுதாயம் இனமாகின!
இனம் சிலவாகின!
சில பலவையாக பெருகின!
பலவைக்கிடையில் போராகின!
போரில் வீரமும் தீரமும் உறுதியாகின!
சேர,சோழ, பாண்டியர் என ஓங்கி வளர்ந்தனர்!

அன்று வாழ்ந்தவர்களிலும் வளர்ந்தவைகளிலும்!
இன்றும் உயிர்ப்புடன் இருப்பதோ!
நம்தமிழும் அதன் பண்பாடுமே!


வேற்றுமைகள் பல இருப்பினும்!
நாம் ஒற்றுமையாய் இருக்க இதுபோதும்!
காலம் கடந்து நிற்பதற்கு நம்மொழி சாட்சி!

நாடோடியோ நாட்டுவாசியானான்!
நாடெங்கும் கமழட்டும் தமிழ் வாசனை!

உலகின் முதல் நாகரீகத்தின் அடையாளம் தமிழ்!
உலகின் முதல் குடி தமிழ்!
உலகின் மூத்த குடி தமிழ்!


வாழ்க தமிழ்! வாழ்க பாரதம்!

-செல்வா





No comments:

Post a Comment