செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 28 June 2018

நடுத்தர வர்க்கம்!

நடுத்தர வர்க்கம்,
மேலும் இல்லை,
கீழும் இல்லை!
நடுவில் தொங்கும்!
விழவும்,ஏறவும்,
முடியாமல் தவிக்கும்,
சராசரி மக்களின்,
தாகக் குரலின்,
சத்தம் நிசப்தம்!

கணக்கு பார்த்து,
பகுத்து, வகுத்து,
பார்த்து பார்த்து,
செலவு செய்து,
காத்து சேமித்து,
மிச்சம் பிடித்து,
நாட்களை நடத்து!

கைக்கும் வாய்க்கும்,
மட்டும் கிட்டும்,
சம்பளமும் வருவாயும்,
அவசர செலவும்,
திடீர் வரவும்,
அவ்வப்போது வரும்!

வசதி வாய்ப்பும்,
வாழ்வும் சுகமும்,
மலையென உயரம்,
ஏறும் வேகம்,
எறும்பின் வேகம்,
நம்பிக்கை மட்டும்,
நாட்களை நகர்த்தும்!

கனவு வாழ்வும்,
செழித்த நாளும்,
படித்தால் வரும்,
என்பதே நிஜம்,
நாடும் வீடும்,
படித்தால் முன்னேறும்!
உழைத்தால் முன்னேறும்!

சிறப்பாக படித்து,
நம்வீடும், நம்நாடும்,
முன்னேற முற்படுவோம்!

இல்லையெனில் அறிந்ததை,
சிறப்பாக செயல்படுத்தி,
சீராக முன்னேறுவோம்!

எல்லா வழிகளும்,
இலக்கை நோக்கி,
இருக்கட்டும்!
நெறி தவறிய வழி,
படு குழியாகும்!
அதுதவிர அத்தனையும்,
நல்வழியே!!!

நடையெடுப்போம்!
படையெடுப்போம்!
நாளை நமதே!


-செல்வா

No comments:

Post a Comment