செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 30 June 2018

பயில்வோம்!

பயில்வோம்!

பயிலும் வரை எதுவும் கடினமே வாழ்வில்!
முயன்றுபார் வெற்றியை முத்தமிடுவாய்!


மூழ்கும் சூழலிலும் தண்ணீரை அழுத்த தானாக மேலே வருவோம்!
சூழ்நிலைகள் காரணமல்ல,
நம் மனமே காரணம்!

துயிலும் வரை சோம்பல் கடினம்!
பயிலும் வரை கல்வி கடினம்!
பேசும் வரை பாஷை கடினம்!
உடம்பு வளையும் வரை உடற்பயிற்சி கடினம்!
எழுந்து நிற்கும் வரை வெற்றி கடினம்!

எத்தனை முறை வேண்டுமானாலும் வீழ்க!
அத்தனை முறையும் எழுக!
மனமே மார்க்கம்! எண்ணமே வெற்றி!


விழு! எழு! விருட்சமாகுக!

-செல்வா





No comments:

Post a Comment