செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 16 June 2018

தூக்கம்!!!

தூக்கம் சிறிது நேர மரணம்!
நினைவில்லா தருணம்!
புலன்கள் அடங்கிய கணம்!
சிந்திக்காமல் பொய்த்திருக்கும் மனம்!


தூக்கம் என்பது இல்லை எனில்,
ஓடும் மனிதற்கு ஓய்வு ஏது?

மனிதன் தன் வாழ்நாளின் பாதியை உறங்கிக் கழிக்கிறான்!
ஆனால் உலகில் பலர் நல்உறக்கமின்றி தவிக்கிறார்!

தூக்கம் தரும் நிம்மதி!
தூக்கம் தரும் உற்சாகம்!
தூக்கம் தரும் புத்துணர்வு!
தூக்கம் தரும் அமைதி!
தூக்கம் தரும் போதை!
எங்குமில்லை!வேறு எதிலுமில்லை!

பிள்ளை குணம் கொண்டவனுக்கும்!
கொடூர மனம் கொண்டவனுக்கும்!
நல்ல தனம் கொண்டவனுக்கும்!
கொள்ளை பணம் கொண்டவனுக்கும்!
யாராக இருப்பினும் தூக்கம் இன்றியமையாதது!

தூக்கமில்லை எனில் துலங்காது  மனிதஇனம்! 
தூக்கமே நல்வரம்!!!

-செல்வா


No comments:

Post a Comment