செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 3 May 2018

இந்த நொடியில் வாழ்வோம்!!!

இந்த நொடியில் வாழ்வோம்!!!

வாழ்வும் அப்படித்தான்,
இந்த மனித மனமும் அப்படித்தான்!!!

இருப்பதை விட்டுவிட்டு இல்லாததை எண்ணி நினைத்துருகும்!
நினைத்தது கிடைத்தால் அதன் நிலையாமையை கண்டு கவலை கொள்ளும்!!!

கடந்தவை கசப்பு எனில் அவை நல்அனுபவமாகும்,
அல்லாமல் இனிப்பு எனில் அவை நல்நினைவுகளாகும்!

கடந்தவை நம்மை ஒருபோதும் கட்டுப்படுத்தா!
அஃதே வருபவை நம்மை ஒருபோதும் பயமுறுத்தா!
அவ்விதமே ஏதிர்கொள்ள மனதை பயிற்றுவிப்பாயாக!!!

இருக்கும் ஒவ்வொரு  நொடியையும் முழுமையாக உணர்க!!!

இந்த நொடி வாழ விளைவோம்!!!

விழி.எழு.விருட்சமாகுக!!!

-செல்வா


No comments:

Post a Comment