செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 2 May 2018

பயணம்!!!

பயணங்கள் வாழ்வின் புத்துயிர்புக்கள்!
எதிர்கால நினைவிற்கான உண்ணத வைப்புத்தொகைகள்!
முகம் தெரியாத மனிதர்களின் வியப்பூட்டும் சந்தை!
சகிப்பு தன்மையை பயிற்றுவிக்கும் சரியான ஆசான்!

நாம் முன்வர வண்டி தாமதமாகவும்,
வண்டி முன்வர நாம் தாமதமாகவும்,
இரண்டும் சரிவர சாலை நெரிசல் ஆகவும் துவங்கிடும் பயணம்!

சன்னல் ஓரத்து இடம் அதீத சுகம்!
அதில் காணும் காட்சிகள் சாலை ஓர வாழ்வின் எதார்த்தங்கள்!!!

எண்ண ஓட்டத்திலும் எதிர்பார்பிலுமே பயணங்கள் அமைகிறது!!!
ஓடும் பாதையில் ஒன்றை முந்த இன்னொன்று என,
பலபல தடைகளை கடந்து சென்றடைவதே பயணம்!
அதுவே வாழ்விற்கான சிறந்த எடுத்துக்காட்டுகள்!

பயணங்கள் சில நேரங்களில் பாடமாகவும்,
பல நேரங்களில் காட்சிப் படமாகவும் அமைகிறது!

எது எப்படி ஆகினும் பலவை நம்கையில் அல்ல என்பதை,
ஒவ்வொரு பயணமும் நினைவுபடுத்துகிறது!!!
பயணப்படுவோம் பதற்றப்படாமல்...

விழி.எழு.விருட்சமாகுக!!!

-செல்வா 

2 comments: