செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 22 May 2018

தூத்துக்குடி அநீதி!

தூத்துக்குடி அநீதி!

இந்த நாள் ஓர் கருப்பு நாள்!
அநீதிக்கும் அடக்குமுறைக்கும்,
இடையில் அப்பாவிகள் கொல்லப்பட்ட நாள்!
காவல் அதன் கண்ணியத்தை இழந்த நாள்!
மக்கள் பிரதிநிதி அடக்குமுறையை ஏவிய நாள்!

எங்கனம் மன்றாடுவேன்!
சொந்த நாட்டில் அடிமை அரசு!
மக்கள் நலம் விரும்பா கைக்கூலிகள்!
அப்பாவிகளை சுட்டுக் கொன்ற துப்பாக்கிகள்!
காலில் சுடவேண்டிய துப்பாக்கிகள் குறி தவறினவே!

தன் அடிப்படை உரிமை இழந்தான்!
தன் அடிப்படை உடமை இழந்தான்!
இப்பொழுது போராடி சுவாசிக்க சுத்தமான,
காற்றை பெறமுடியாமல் மூச்சைவிட்டான்!
இளைஞனும், யுவதிகளும் இந்த அற்ப,
அரசியல்வாதிகளால் கொள்ளப்பட்டார்கள்!
ஒருகணம் யாரும் யோசிக்கவில்லை!

மனித நேயம் மண்ணில் புதைக்கப்பட்டுவிட்டது!
அகம் கொண்டவனை, அறம் என்றும் விடாது!
மக்களின் கண்ணீரில் மாண்டு அழியும் இவ்வரசு!!!

#BanSterlite
#Standfortuticorin



-செல்வா 




No comments:

Post a Comment