செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 10 May 2018

பெண் சுதந்திரம்!!!

பெண் சுதந்திரம்!!!

சுதந்திரம் மிக உணர்ச்சிபூர்வமான வார்த்தை!
மனித பிறவிகொண்ட நாம் அடக்குமுறை இன்றி வாழ்வதது!
பிறனில் அடிபணியாமல் தன்னொழுக்கத்துடன் வாழ்வதது!

ஆண் பெண்னையும், மேல்சாதியான் கீழவனையும் கட்டுபடுத்தவே கதை
திரித்தான்!
அடக்கி ஆள பலபல சாங்கியத்தையும்,சம்பரதாயத்தையும் படைத்தான்!

சுதந்திர அறிவு பெற்றால் பெண்டிர் ஆண்துணை தேடார்!
கருத்து,கல்வி,பொருள் என தன்காலில் தானே நிற்பார்!
அதனாலே அடக்கியாள பல வியூகம் அமைத்தான்!
அதை சமுதாயத்துடனும், சமயத்துடனும் முடிச்சிட்டான்!
மீறுவோர் குற்றவாளி என இரும்புக்கரம் கொண்டு அடக்கிட்டான்!

ஆனால் அந்நிலை இன்றில்லை,
ஈ.வே.ரா போன்ற இன்னபிற தக்கோரால் தொலைந்திட்டது அந்நிலை!
பெண்டிர் பலபல அரிய செயல் புரிந்து மேல் எழுந்த நிலை!
அனைத்து செயல்களையும் பாகுபாடின்றி செய்யும் காலநிலை!

இனியாவது கட்டுப்படுத்தாமல்,
கைபிடித்து சமமாக நடப்போம்!
தூரம் சிறிதே துணை இருக்க...

-செல்வா

No comments:

Post a Comment