செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 4 May 2018

போட்டி உன்னுடனே!!!

போட்டி உன்னுடனே!!!

வாழ்வில் யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள், 
அதற்கு பதிலாக அவர்களின் குறைகளை களைய முற்படுங்கள்!!!
சில நேரம் தவறுகள் சுட்டிக்காட்ட இடம் கொடுக்கலாம்,
ஆனால் இங்கு யாரும் பூரண சரியானவரில்லை!!! 
காலம் கனியும் காத்திருப்போம் நாமாக!!!

வாழ்க்கையும் இப்படித்தான்.
ஓவ்வொருவரும் தான் சிறந்தவன், தேர்ந்தவன்,
சுத்தமானவன் என்பதை நிரூபிக்காமல்.
மற்றவரை அடையாளமிட்டு அவர்களை விட சிறந்தவன்,
என நிருபம் செய்கிறார்கள்!!!!

மொத்தத்தில் தன்னிகரற்ற தனித்தன்மையை யாரும் நிரூபிக்கவில்லை!

அவ்வாறு  ஒவ்வொருவரும் நிரூபிக்க புறப்பட்டால் அனைவரும் சாதித்தவர்களே!!!

தன்னை தன்முயற்சியால் முந்துகிறவனும்,
அதை நிரூபிப்பவனுமே தன்னிகர் அற்றவன்!!!

நீயும் ஆயத்தாமாகு, நானும் ஆகிறேன்!
ஆனால் போட்டி உனக்கு நீயும், எனக்கு நானுமே!!!

வாழ்த்துக்கள் 👬

-செல்வா...

No comments:

Post a Comment