செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 21 May 2018

சிங்காரச் சென்னையில் ஓர்நாள்!

சிங்காரச்சென்னையில் ஓர்நாள்!

அழகிய காலை பரிதி மிளிர மலர்ந்தது!
ஓயாத ஒசைகள் காதுகளில் ரீங்காரிக்கிறது!
நான் கேட்டு பழகிய தமிழ்தானே என வியப்பு!
அண்ணா, என்னா, குந்து நைனா என துவங்கியது உரையாடல்கள்!

விடுமுறை நாளில் சாலைகளுக்கும் விடுமுறை என்பதை அதன் அமைதி பிரதிபலித்தது!
தார் சாலைகளும் அதன் மீது படிந்த அடர்த்தியான தூசிகளும் மக்கள் நெரிசலுக்கு உதாரணங்கள்!
பாலங்களும், கால்வாய்களும் மக்களடர்த்தியில் புலம்புகிறது!
என் செய்வேன் நானோ! ஒர்நாள் விருந்தாளி!

அழகிய காலை! அற்புதமான நகரம்!
தொடர்கிறது எனது குறு பயணம், 
மின்சார ரயிலின் ஒலி ஒலிப்பானாக!!!
ப்பம்! ப்பம்! ப்பம்!ப்பம்! ப்பம்! ப்பம்!

சிங்காரச் சென்னையில் ஓர்நாள்!

-செல்வா

No comments:

Post a Comment