செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 28 May 2018

மறதி இந்நாட்டின் தேசிய வியாதி!

மறதி இந்நாட்டின் தேசிய வியாதி!

நாட்கள் மிகவேகமாய் ஓடுகின்றன!
சுயபிரச்சனைகளை கடந்து சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டோர் இன்று நூற்றில் சிலர்!
மற்றவரோ காற்றில் வீசும் நறுமணத்திற்கு இணங்க மாறிக் கொண்டே இருக்கிறார்கள்!

என்னால் என்ன செய்ய முடியும் என்ற நிலை தாண்டி,
ஒவ்வொருவரும் இன்று ஊடகவியலாளரே!
நவீன காலத்தில் இன்றைய தகவல் பரிமாற்றம் அவர்களின் கையில்!

காற்று மற்றும் நீர் மாசுபடக்கூடாது என்பதே,
ஆலை இயக்கத்திற்கான அடிப்படை விதிமுறை!
ஆனால் இதை ஆலை ஒருபோதும் கடைபிடிக்கவில்லை!
அநீதியாக நடக்கும் ஆலையை யாரும் கண்டிக்கவில்லை!
இந்தியாவிற்கு தாமிரமே முக்கியம் என்பதுதான் ஸ்டெர்லைட்டிற்கான நிலைப்பாடு!

தொடர் போராட்டத்தை கண்டுகொள்ளா அரசு!
நூறாவது நாள் முற்றுகை போராட்டத்தை கலவரமாக சித்தரித்து!
அப்பாவி மக்களின் உயிர்களை காவு வாங்கியது!
ஒரு உயிர்க்கு சில லட்சங்கள் ஈடாகுமா?

அந்த நாள் ஓர் கருப்புநாள்!
தமிழக வரலாற்றில் படிந்த இரத்தவடு என்றும் மறைந்துபோகாது!

கிழிக்கப்படுவது தேதியாக இருக்கலாம்!
கடந்து செல்வது நாட்களாக இருக்கலாம்!
ஓடுவது வாரமாக இருக்கலாம்!
ஆனால் மங்கா நினைவுகள் கல் மேல் பொறித்த கல்வெட்டுகள்!
காயத்தில் ஏற்பட்ட ஆறா வடுகள்!

தழும்புகள் மறைவதுமில்லை! மன்னிக்கப்படுவதுமில்லை!

காலம் வரும்!
காத்திருப்போம் நாமாக!
ஓர் ஓட்டு உங்களின் தலையெழுத்தையும்,
எங்களின் தலையெழுத்தையும் சேர்த்தே மாற்றும்!

நம்பிக்கையுடன்!

#Standforthoothukudi

-செல்வா






No comments:

Post a Comment