செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 17 May 2018

வெற்றியின் வாசற்படி!

வெற்றியின் வாசற்படி!

தோல்வி எனக்கு கிட்டிய முதல் பரிசு!
என்னை அள்ளியனைத்த முதல் வெற்றி!
பிறரும் என்மீது அக்கறை கொண்டார் என்றுணர்த்திய தருணம்!
வாழ்வில் நாம் நகர்கின்றோம் என்பதை உணர்த்தும் கருவி!
மனிதன் லட்சியப்பாதையில் கால் ஊன்றி நடக்க உதவும் லாடம்!

செழித்து வளர வித்திட்ட தழை உரம்!
உழைப்பிற்கு கிடைத்த உண்ணத உத்திரவாதம்!
திறம் மேம்பட பயன்படும்  ஊற்றுநீர்!
நீண்டு வளர்வதற்காக ஒடிக்கப்படும் கிளைகள்!

தடுக்கி விழுந்தவர் எல்லாம் தோற்றவரில்லை! 
தம்முயற்சியில்லாதவரே தோற்றார்!
தடைகள் பலவரினும் அதை தகர்ப்பவர்,
இதிகாசத்தில் அழியா இடம் பெறுகிறார்!
முயற்சி செய் முடியாதது ஏதுமில்லை!
 
விழி.எழு.விருட்சமாகுக!!!

-செல்வா

No comments:

Post a Comment