செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 4 May 2018

துயில் கலைத்திடு தமிழா!!!

துயில் கலைத்திடு தமிழா!!!

எவன் தலையில் மொட்டை அடிச்சா எனக்கென்ன?
இதுதான் ஆள்பவரின்  நிலைப்பாடு இன்று!

தன்னலம் கருதி அடகு வைத்திட்டனர் தமிழ்நாட்டை!
ஆளுமை மடிந்ததால், காற்றிற்கு மடியும் புல்லாகிவிட்டனர்!

காலி இடமிருக்க காண்பவருக்கெல்லாம் ஆசையாம்!
கேலி செய்யும் நடிகர்களுக்கு குடியாள ஆசையாம்!
வேடமணிந்து வந்திங்கே வெறும் படம் காட்டுகிறார்கள்!
மோசம்போகா கூட்டத்தை குழப்பிவிட பார்க்கிறார்கள்!

சாதி, மத போர்வையில் குற்றம் புரிவோர் பலர் இங்கு!
அவருக்கு துணைபுரிவோர் அதிகாரத்தில் பலர் இங்கு!

இந்திரியம் கொண்டுள்ளோம், அறிவிற்கு பஞ்சமில்லை சற்று ஆராய்ச்சி தேவையடா!
உற்று நோக்கு பல வேசங்கள் கலைந்து உண்மைகள் புலப்படும்.
காண்பவை கானல் நீரா, இல்லை கடலா என தென்படும்.

விழி.எழு.வீரியமாகுக.

-செல்வா

No comments:

Post a Comment