செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 25 May 2018

யார் காரணம்?

யார் காரணம்?

யார் காரணம் எங்கள் துன்பத்திற்கு! கார்பரேட்டுகளா?
இல்லை அதனிடம் பணம் வாங்கிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளா?

எதற்காய் சுட்டீர்கள் அறவழியில் போராடியவர்களை அச்சுறுத்தவா?
இல்லை இந்த அரசு மக்களுக்கானது அல்ல என்ற ஐயம் தீர்க்கவா?
வீதி வந்து வயது,பாலினம் பாராமல் போராடிய துணிவை அடக்கவா?
ஒன்றா, இரண்டா பதிமூன்று உயிர்கள் அல்லவா, இன்னும் பல வலிகள் அல்லவா!

ஒன்றாய் கூடிய மக்களின் உணர்வு புரியவில்லை!
அவர்களின் துணிவு கண்டு உங்கள் நெஞ்சம் பொறுக்கவில்லை!
அதன் ஒற்றுமை கண்டு உங்கள் அஸ்திவாரம் நிலைக்கவில்லை!
தனியார் ஆலைக்கு கொடுத்த முன்னுரிமையை,
சொந்த மக்களுக்கு கொடுக்க தவறியது ஏன்?

எந்தவித முன்அறிவிப்புமின்றி சுட்டு வீழ்த்தினாய்!
நியாயம் கிடைக்க வேண்டும்!

மீறப்பட்ட மனித உரிமைக்கு, நீதி கிடைக்க வேண்டும்!
நோய் பரப்பும் ஆலைக்கு நிரந்தர  பூட்டு போட வேண்டும்.

#Bansterlite
#Standforthoothukudi

-செல்வா







No comments:

Post a Comment