செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 23 May 2018

மனிதாபிமானம் எங்கே?

மனிதாபிமானம் எங்கே போயின!
மக்களின் கதறல்கள் கேட்காமல் போயின!
சனநாயகம் அரசு காணமல் போயின!

பசுமை வளாகத்தில் ராட்சத தொழிற்சாலை கட்டினர்!
சுற்றுச் சூழல் வரம்பு மீறி நச்சுப்புகையை காற்றில் கலந்தனர்!
சுத்தமான காற்றின்றி, மக்கள் நோய்க்கு ஆளாகினர்!
பலநாட்கள் போராடினர், தொடர்ந்து போராடினர்!
குழந்தை,பெரியவர்,ஆண்,பெண்  என்று பாராமல் எல்லோரும் போராடினர்!
அரசோ செவிடாய் மமதையில் இருந்தது!
நூறாவது நாள் போராட்டம் கலவர களமானது!
தோட்டாக்கள் அப்பாவிகளின் நெஞ்சை துளைத்தது!
பதினோரு பேர் குண்டால் உயிர் துறந்தனர்!

துளியும் ஈரமில்லை இவ்வரசிற்கும் அதன் ஆட்சியாளர்களுக்கும்!
இழக்கும் வயதில் அவர்களுமில்லை!
துறக்கும் வகையில் அவர்களின் துன்பமுமில்லை! 

வாக்களித்து தேர்ந்தெடுத்தவர் தள்ளி நிற்க! 
வன்முறை அறியா அப்பாவி மக்கள் வித்தர்!
நேர்மையான பிரதிநிதி இல்லை! 
சாதி,மதம், பணத்திற்காக தேர்ந்தெடுத்தவன் நமக்கில்லை!
உனக்கானவன் எவன் என முடிவு செய், 
அன்று நமக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டும்!

#Ban_Sterlite
#Stand_For_Thoothukudi

-செல்வா

No comments:

Post a Comment