செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 28 May 2018

மக்களின் வெற்றி!!!

அரசாணை வந்தது!
ஆலைக்கு மூடுவிழா!
கட்டுக்குள் நிற்காத தவிப்பிற்கான முடிவுரை!
மக்கள் குரலுக்கான மணிமகுடம்!

இந்த வெற்றியின் விலையோ மிக அதிகம்!
விட்டுச்சென்ற வெற்றிடமோ மேலும் அதிகம்!
ஒன்றா, இரண்டா பதிமூன்று உயிர்கள்!
அராஜக ஆட்சியில் சுட்டு வீழ்த்தப்பட்ட தியாகிகள்!
சுதந்திர திருநாட்டில் தோட்டாவினால் உயிர் நீர்த்த முதல் பெண்!
ஓர் தனியார் ஆலை மூட அறவழியில் போராடி உயிர் நீர்த்தாள்!
இன்றும் என்றும் வரலாறாய் மாறிப்போனாள்!

ஐந்து நாள் முந்தி மூடியிருந்தால் இவ்வுயிர்களும் கொண்டாடி இருந்திருக்கும்!
மன்றாடி, அகிம்சையில் போராடி இருபதாண்டுக்குப்பின்னான வெற்றி!
இனியும் காலம் தாழ்த்தாத செயலுக்கு நன்றி!

வாழ்ந்த பூமி மலடாகி, பெய்கின்ற மழை அமிலமாகி,
சுவாசிக்கும் காற்று விசவாயுவாகியதன் விளைவே இந்த தொடர் போராட்டங்கள்!
ஒர் இரு நாட்களல்ல இருபது ஆண்டிற்குள் பலமுறை பூட்டப்பட்டு,
மீண்டும், மீண்டும் திறக்கப்பட்ட ஆலை அது!
இன்று மீண்டும் ஓர் தற்காலிக பூட்டு!
நீதிமன்றத்தில் வழக்கு இருக்க,
எப்படி சிந்திப்போம் இதுமுழுவெற்றி என!

எங்கள் நல்வாழ்வு,
உங்கள் நோக்கம் எனில்!
இத்தீர்ப்பு என்றும் மாறாது!
நாளை மேல் நம்பிக்கை கொள்வோம்!
இன்று இத்தீர்ப்பு உயிர்நீர்த்த தியாகிகளுக்கு சமர்ப்பணம்!

வாழ்க தமிழ்! வாழ்க தமிழர்!
வாழ்க செந்தமிழ் நாடு!

வாழிய! வாழியவே!

-செல்வா

No comments:

Post a Comment