சுடர்விடு தமிழினமே!!!
தமிழ் என்ற சொல் வியத்தகு வலிமையானது!
பல போராளிகளையும், வீரர்களையும், தீரர்களையும் உருவாக்கியது!
அவ்வினத்தின் சினம் பொருந்திய வீரத்தை ஒருவரும் நேரிட்டு வெல்லலாகாது!
பகை சூழ்ந்த மன்னர் எல்லாம் பிறர் சூழ்சியாலே மாண்டனர்!
நேராக எதிர்த்து நெஞ்சிலே குத்தியவர் ஒருவரிலர், முதுகில் குத்தியவர் அனேகர்!
கட்டபொம்மன்,தீரன் சின்னமலை, வேலுத்தம்பி, புலித்தேவன், வாஞ்சிநாதன்,
வேலு நாச்சியார், அழகு முத்துக்கோன், பிரபாகரன் இன்னும் பலராவார்!
தமிழுக்காகவும் அதன் மக்களுக்காகவுமே உயிர் நீர்த்தார்!
அவர்களின் எண்ணம், குரல், செயல், நோக்கம் அனைத்துமே ஒருமித்திருந்தது!
உலகம் போற்ற வேண்டியவர்களின் புகழ் குன்ற நம்முள்ளே உள்ள பிரிவுகளே காரணமாயின!
மொழியின்றி எவ்வினமும் தழைத்துவாழாது, இது தகும் நம்மினத்திற்கு!
ஆனால் இன்றோ படித்தவன் கலைய வேண்டிய சாதியை தூக்கி முன்னெடுக்கிறான்!
ஆனவக்கொலைகளுக்கும், சாதி சண்டைகளுக்கும் பஞ்சமில்லை!
மாறுகின்ற உலகில் மாறாதது நம்தமிழ் பற்று ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்!
ஈழத்தில் இழந்த உறவுகளுக்கு செய்யும் சிறிதொரு மரியாதை இது!
இனி உலகின் எங்கோ ஓர் இடத்தில் தமிழனுக்கு அசம்பாவிதம் நடந்தால்,
முதல் குரல் நம்முடையதாக ஒலிக்க வேண்டும்!
தமிழன் என்ற சொல்லுக்கு புத்துயிர் தருவோம்!
பிறவேற்றுமைகளை கலைவோம்!
ஓர் இனமாய் எழுவோம்!
தமிழினமாய்! தமிழனாய்!
தமிழாய்!
வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்!
#மே18 இனப்படுகொலைநாள்
# May18 Tamil Genocide Day
-செல்வா

No comments:
Post a Comment