செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 12 May 2018

செவிலியர் தினவாழ்த்து மடல்!!!

வெள்ளை உடையணிந்த கமலம் நீ!
நல்ல உள்ளம் கொண்ட பவளம் நீ!
சேவை எண்ணம் கொண்ட ஔவை நீ!
இறைவன் அளித்த இரண்டாம் தாய் நீ!
காலம்பாராமல் உழைக்கும் கடிகாரம் நீ!

அவசரகாலத்திலும் தன்னலம் பாரமல் பணியாற்றும் போராளி நீ!
என்னை ஈன்று எடுக்க உதவியவள் நீ!
வயது, பாலினம் பாரா பண்பு கொண்டாய் நீ!
உடைந்தவர்களின் வாழ்வை சரிபடுத்துபவர் நீ!
பல மனநிலை கொண்டோரை அரவணைத்து தேற்றினாய் நீ!

உன்னை போற்றிட ஒரு நல்தினம் இது!
பல தலைமுறை காத்த நீர் வாழ்க! 

நின் சேவை தழைத்து வளர்க!

இன்நாடும் இம்மக்களும் உன் சேவையை என்றும் மறவார்!!!

வாழ்க! வாழ்க!!!


-செல்வா


1 comment: