செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 26 May 2018

இழந்ததை மறக்காதீர்கள்!!!

ஒரு முதலாளிக்கு கைக்கூலிகளாய்!
காசுக்கு கையேந்தும் அடிமைகளாய்!
பணத்திற்கு பணியும் துரோகிகளாய்!

சொந்த மக்களை கொன்ற பாவிகளாய்!
அமைதிப்போராட்டத்தை குலைத்த நரிகளாய்!
போராட்டத்தை கலைக்க காலம் தேடிய புலிகளாய்!
ஒன்றும் அறியா அப்பாவிகளை கொன்று குவித்த பாவிகளாய்!

எந்தவித முன்னறிவிப்புமின்றி தாக்கிய கோழைகளாய்!
அநீதிக்கு துணை நின்ற தூண்களாய் உள்ளாய்!

மரண தண்டனை பெற்றவனுக்குக்கூட கடைசி ஆசைக்கு உரிமை உண்டு!
ஆனால் எம்மக்களுக்கோ அதற்கு கூட ஓர்கணம் கிடைக்கவில்லை!

இழக்கும் வயதில் அவர்களும் இல்லை!
துறக்கும் வகையில் அவர்களின் துன்பமும் இல்லை!

இனி இல்லை என்ற சொல்லே ஒலிக்க வேண்டும்!
பணத்திற்காக எவனுக்கும் ஓட்டில்லை!
மக்களை கொன்றவனுக்கு ஆசனமில்லை!
கபட நாடக காரணுக்கு பதவி இல்லை!
நாங்கள் விழித்துவிட்டோம். இனி ஒருபோதும் உறங்கமாட்டோம்!
காலம் வரும் அன்று எங்கள் ஓலத்திற்கான விடைகிடைக்கும்!

ஓர் ஓட்டு! அதில் உன் பலம் காட்டு!
இழந்ததை கணக்கிட்டு!
நல்வழி காட்டு!

விழி. எழு. சுடர்விடு!

#Bansterlite
#Standforthoothukudi

-செல்வா


No comments:

Post a Comment