செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 26 April 2018

பிரியாவிடை நட்பே!!!

அறைகள் சிறியாதாக இருந்தது நம் மனமில்லை!
நாட்கள் குறைவாக இருந்தன நம் நட்பல்ல!

வேற்றுமைகள் லேசாக இருந்தன நம் ஒற்றுமையல்ல!
கவலைகள் கண்டதில்லை நாம்!
களிப்பை மட்டுமே கண்டோம்! 

மிகுந்த நல்அக்கரை கொண்டோம்! 
ஒருவரை ஒருவர் நன்றாக பயின்றோம்!

காலத்தை பிடித்து வைக்கமுடியவில்லை!
நல்நினைவுகளாக சேமித்து வைத்துள்ளோம்!

பின்பு எப்பொழுது நினைத்தாலும் வருடிக்கொள்ள!!!
மறக்கமாட்டோம்! மறுபடியும் சந்திப்போம் வாழ்க்கை ஒரு வட்டமே!

வாழ்க்கை வழங்கும் அனைத்து வாய்ப்புகளையும் களையாமல் பயன்படுத்துக! நல்மனம் சேர்ப்போம்!
தினம் தினம் புத்துயிர் பெறுவோம்!!!

-செல்வா

No comments:

Post a Comment