காற்றில்லாமல் நான் வாழ்வேன்,
ஆனால் உன் வாசமில்லை எனின் என்செய்வேன் காதலி?
ஆனால் உன் வாசமில்லை எனின் என்செய்வேன் காதலி?
வெளிச்சமில்லாமல் நான் வாழ்வேன்,
ஆனால் உன் முகம் பார்க்க முடியவில்லை எனில் என்செய்வேன் காதலி?
செவிடனாய் நான் வாழ்வேன்,
ஆனால் உன் குரல் கேட்காதெனின் என்செய்வேன் காதலி?
ஆனால் உன் குரல் கேட்காதெனின் என்செய்வேன் காதலி?
நினைவின்றி நான் வாழ்வேன்,
ஆனால் உன் எண்ணமில்லை எனில் என் செய்வேன் காதலி?
ஆனால் உன் எண்ணமில்லை எனில் என் செய்வேன் காதலி?
நீயின்றி நான் வாழ்வேன் எனின் அது உன் நினைவேடு தான்,
இங்கும் அங்கும் எங்குமாய்,
என் நினைவில், கனவில் நிறைந்திருக்கிறாய், உறையவைக்கிறாய்...
நீயில்லாத வாழ்வு வெறுமையே!
அதுவே உன் விருப்பமெனில்,
நிலா இல்லாத இருட்டு வானமாக என் வாழ்க்கை நகரட்டும்!!!
நட்சத்திரங்களுடன் நடைபயில கற்றுக்கொள்கிறேன்!!!
நிலா இல்லாத இருட்டு வானமாக என் வாழ்க்கை நகரட்டும்!!!
நட்சத்திரங்களுடன் நடைபயில கற்றுக்கொள்கிறேன்!!!
-செல்வா

No comments:
Post a Comment