புதியயுகம் தான் இது, ஆனால் மிகவும் புதிதல்ல!
போராடும் குணம் இயல்பிலே தென்பட்டாதாலோ என்னவோ!
இன்றுவரை இடைவிடாமல் போராடிக்கொண்டிருக்கிறோம்!
போராடும் குணம் இயல்பிலே தென்பட்டாதாலோ என்னவோ!
இன்றுவரை இடைவிடாமல் போராடிக்கொண்டிருக்கிறோம்!
அடிப்படை நலனை உருவிக்கொண்டு, வல்லரசுக்கான வளர்ச்சி பிம்பம் ஏன்?
இயற்கைக்கு முரணாக, அதன் அமைப்பை உருகுலைத்து, மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, மற்றும் ஸ்டெர்லைட் ஏன்?
இவை அனைத்தும் ஒற்றை நேரத்தில் கற்றை கட்டி முடிக்க முனைப்பது ஏன்?
மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு மமதையில் இருக்காது!
மக்களின் ஐயத்தை போக்கும்!
மக்களின் விடயத்தை தீர்க்கும்!
மக்களின் ஐயத்தை போக்கும்!
மக்களின் விடயத்தை தீர்க்கும்!
அடுத்த தலைமுறைக்கு சுவாசிக்க நல்ல காற்றையும்,
உண்ண விசமற்ற உணவையும்,
குடிக்க நஞ்சற்ற நீரையும் கொடுப்பது நமது தலையாய கடமை!
கடமை மறவீர்! காலம் கனியும்!
வாய்மையும், உண்மையும் நம்வாஞ்சியால் வெல்லும்!!!
வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!
வாழிய வாழியவே!!!
-செல்வா

No comments:
Post a Comment