செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 22 April 2018

தேங்கிவிடாதே!!!

ஓடுகின்ற நதியிலிருந்து பிரிந்து சென்று தேங்கிய குட்டை,
நதியை பார்த்து ஏளனமாக கேட்டது, ஓடுவதில் என்ன சுகம் என்று?

அப்பொழுது அலட்டாமல் நதி கூறியது.
நாம் ஓடாமல் என்று தேங்குகிறோமோ,
அன்றே அழுக்கடைய துவங்குகிறோம்,
ஓடினால் ஓடுகின்ற பாதை நம்மை செம்மைபடுத்தி தூய்மையாக்கிவிடும்.

அதுபோலவே வாழ்க்கையும். உழைப்பவனுக்கே மதிப்பு அதிகம்!!!

சோம்பித்திரிபவன் சமுதாயத்தில் சங்கடப்படுகிறான்,
கடமையை செய்பவன் களிப்படைகிறான்...

வாழும் வரை ஓயாதே,
அப்பொழுதுதான் வளர முடியும்!!!

விழி.எழு.விருட்சமாகு!

-செல்வா








No comments:

Post a Comment