நடப்பது நமது கையில் உள்ளதெனில் யோசிப்போமாக,
நமது கையில் இல்லையெனில் அந்த இறைவனை உளமாற யாசிப்போமாக,
நமது கையில் இல்லையெனில் அந்த இறைவனை உளமாற யாசிப்போமாக,
நல்லன நடைபெற...
இறைவன் நமக்கானவர்களை சரியான நேரத்தில் அனுப்பி,
நம்மை தோற்றுவிக்கிறான், தேற்றுவிக்கிறான், பயிற்றுவிக்கிறான்.
ஆனால் மிகச்சரியாக நாம் கற்றபின்பு,
நம்மை தனியாக நடைபயிலச் செய்கிறான்!!!
சிலர் பாதையில் கல், முள் என கரடுமுரடாக இருக்கலாம்,
அவர்கள் பாதம் அதற்கு பழக்கப்பட்டிருக்கும்,
சிலர் பாதை மலர் தூவப்பட்டிருக்கும்,
சிலர் பாதை மலர் தூவப்பட்டிருக்கும்,
ஆனால் அவர்கள் குருடராயிருப்பார்கள்!
நாம் வெளியிலிருந்து பார்ப்பது பலரின் அரைபிம்பமே,
முழுதும் நாம் அறியவில்லையே?
நமக்கு கிடைத்த பாதையில் நாம் பயணிப்போம்.
பிறர் பாதையை எண்ணிப்பாராமல் நமது இலக்கை அடைவோம்...
விழி! எழு! விருட்சமாகுக!
-செல்வா

No comments:
Post a Comment