செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 20 April 2018

உயிர் கொடுத்த உறவு!!!

ஈன்றாள் எனை என்அன்னை,
வளர்த்தாளாக்கினார் எந்தந்தை,
எத்தனை புன்னியம் செய்தேனோ, 

இப்பிறவியை இவ்விருவரால் பெற,
இவ்விருவரும் கொண்ட நோக்கம் ஒன்றே,
தான் நோகினும் எத்துன்பமும் எனை அனுகா,
அனுகினும் அனைத்தையும், களைந்தும் எனை காத்தனர்,

இவ்விருவரும் வேண்டிய வேண்டுதல்கள் பாதி எந்நலத்திற்கே,

இறைவா என் வேண்டுதல்களும் அவ்வண்ணமே,
எனை பெற்றவர்களும்,உற்றவர்களும்,
அகமகிழ்ந்து அனுதினமும் திளைத்திட வரம் தருவாயாக!!!

-செல்வா


No comments:

Post a Comment