அல்லலின் ஆதிக்கம் அதிகமானாலும் கலங்காதே,
தன்நம்பிக்கையில் உன்தலை உயரே நோக்கட்டும்,
பிரச்சனைகளை ஒரு தாமரை போல் கையாளுக!
எத்தனை முறை கனமாக நீர் வந்து அமர்ந்தாலும்,
தன்நம்பிக்கையில் உன்தலை உயரே நோக்கட்டும்,
பிரச்சனைகளை ஒரு தாமரை போல் கையாளுக!
எத்தனை முறை கனமாக நீர் வந்து அமர்ந்தாலும்,
இலை நனைவதில்லை!!!
அல்லலின் ஆற்றலைவிட உன்மனவலிமை ஒருபோதும் குன்றா,
விதையாக விளைபடு சூழ்நிலை கடினமோ,
அதனை உன்நம்பிக்கையால் பிளர்த்தெறி,
உன் நினைவில் வழி இருப்பின்,
அது நிஜத்தில் விழிக்கு எட்டும்,
விழிபிடித்த வழியில் தடம் பதித்து நடைகொள்க,
உன் நினைவில் வழி இருப்பின்,
அது நிஜத்தில் விழிக்கு எட்டும்,
விழிபிடித்த வழியில் தடம் பதித்து நடைகொள்க,
தூரம் சிறிதே!!!
விழி.எழு.விருட்சமாகு!!!

No comments:
Post a Comment