செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 13 April 2018

காலம்!!!

சத்தத்தின் சலனத்தை, மௌனம் தருவதில்லை!
அமைதியின்  அகிம்சையை, சத்தம் தருவதில்லை!
இதுவே வாழ்வின் முரண்!

சூழ்நிலையே வாழ்வின் சூட்சமம்,
சந்தர்பங்களே வாழ்வின் திசை மாற்றி,

உத்தமனை சோதித்தும்,
கெட்டவனை கேடுகெட்டவனாகவும் திரிக்கிறது காலம்,
காலம் கனிதல் வரமே! காத்திருப்பது தவமே! 

உன்னை ஊக்குவிக்கும் ஒற்றை மனிதன் நீயே! பார்த்துகொள்!

- செல்வா...



No comments:

Post a Comment