செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 3 March 2018

சொல்லப்படாதவை!!!

சொல்லப்படாதவை என்றும் சுகமே!
சொல்லாத காதலை கனவு காண சுகம்!
சொல்லாத ரகசியத்தை காத்தல் சுகம்!
சொல்லாத உழைப்பிற்கான அங்கீகாரம் சுகம்!
சொல்லாத வழியை உருவாக்குவதில் சுகம்!
உள்ளும்! புறமும் ஒருசேர மகிழ்வது தேடலில்தான்!
தேடித் திளைத்திடுவோம்! 
விடையென்னும் விண்மீன் காண!!!

-செல்வா


No comments:

Post a Comment