செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 29 March 2018

நட்பே! நண்பனே!

நட்பே! நண்பனே!

அகங்காரமில்லாமல்,
ஆசை ஆசையாய்,
இன்புற்று,
ஈட்டியது இந்நட்பு,
உவகைத்தோம்,
ஊக்குவித்தோம்,
எண்குணன் வழி,
ஏற்றம் கண்டோம்,
ஐயமில்லை இனி,
ஒற்றுமையே,
ஓட்டுநர் நாமே,
ஔடதாமாகிய நட்பை,
அஃதே கரைசேர்ப்போம்!!!

வாழ்த்துக்கள் நட்பே! 
துளிர்விட்டு வளர்க, காடாக செழிக்க!
மழை மேகந்தனை ஈர்க்க!
நிழல் தருக! கனி, காய் தருக! 
வளர்க விண்முட்டும் விருட்சமாகுக!

-செல்வா

No comments:

Post a Comment