செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 3 March 2018

மறைக்கப்பட்டவை!!!

மறைக்கப்பட்டவை என்றும் தூய்மையானவை!
மறைக்கப்படும் உண்மை நெறியற்றவர்களை காக்கிறது,
மறைக்கப்படும் வரலாறு கயவர்களை காக்கிறது,
மறைக்கப்படும் புதையல் களவானிகளை காக்கிறது,
மறைக்கப்படும் தத்துவம் கொள்கையற்றவரை காக்கிறது,
மறைக்கப்படும் பணம் நியாயமற்ற எஜமானனை காக்கிறது,
மறைக்கப்படுபவைகளுக்கு காலமே திறவுகோல்!!!
முத்து அதன் சிற்பிக்குள் எவ்வளவு மறைவாக பாதுகாக்கப்படுகிறதோ அவ்வளவு தூய்மையாக பிரகாசிக்கிறது, அதனால் அச்சம் கொள்ளாதே மனிதா மறைக்கப்படும் உன் வரலாறு வெளிப்படும் பொழுது உன்னை யார் என நீ புரிந்து கொள்வாய்!!
!
சிந்தனை கொள் மனமே! மதிமயக்க இத்தனை, இவ்வுலகில் எனை யான் என மறக்க இத்தனை,

உனக்கானதை நீயே அகழ்ந்து அறி, 
அதுவே அறிவொளி!!!! அகவிருள் அகற்று!!!
அறிவொளி வீசிடுக!!!!
வாய்மையே வெல்லும்!!!
-செல்வா


No comments:

Post a Comment