செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 21 March 2018

தமிழினம்!!!

உலகின் மகத்தான இனம் தமிழினம்,
எக்காலத்திலும் மொழியைவிடாத இனம்!!!

அகங்காரமில்லா அகிம்சையான இனம், அதன் மொழியை போல்,
பல அடக்குமுறை, ஆட்சி, சமுதாய மாற்றம் கண்டு தழைக்கும் ஒப்பற்ற இனம்!!!

வள்ளுவன், பாரதி, கம்பனை கவியாக பெற்ற மானிட இனம்!
அறவாழ்வே அமுதம், அதனிலே ஆக்கம் உயர்வு என்றுரைக்கும் இனம்!!!
காலத்தின் வடிகட்டுதலில், சமுதாய கட்டமைப்பில் புதைந்து கிடந்த மரபுகளுக்கு அர்த்தம் கண்டோம்!!! வியந்தோம்!!!
அறிவில், அறிவியலில், மருத்துவத்தில், மானுடத்தில் சிறந்த இனம் நாமே என்பதை உணர்ந்தோம்!!!

மொழிதனை உயிரென பாவித்து,
அதன் இயல், இசை, நாடகத்தில் திளைத்த இனம்!
அழிக்கமுடியாத சுவடுகளை கொண்ட இனம்!
ஏனோ தரிகட்ட மனிதர்களின் கபடநாடகத்தில் சிக்கித்தவிக்கும் இனம்!!!

காலம் ஒரு கருவி அதனில் கடத்து நம்மொழியை,
 சாதி கடந்து, மதம் கடந்து மொழியை பற்றுவோம்!!! இறுக்க பற்றுவோம்!!! நாளை நமதாக வேண்டுமேனில் இன்றைய பிடி விடாபிடியாக இருக்க வேண்டும்!!!

விதை விதைப்போம், களை எடுப்போம், பயிர் காண்போம், நாளை நமதே!!! 

-செல்வா

No comments:

Post a Comment