அன்புசெய் இந்த தேசம் அழகாக தெரியும்!
அதில் உள்ள உள்ளத்தின் வாசம் நன்றாக புரியும்!
அதில் உள்ள உள்ளத்தின் வாசம் நன்றாக புரியும்!
அன்புசெய் இந்த மண்ணின் மகத்துவம் தெரியும்!
அதில் உள்ள கலாச்சாரத்தின் சாராம்சம் புரியும்!!!
அதில் உள்ள கலாச்சாரத்தின் சாராம்சம் புரியும்!!!
அன்புசெய் இந்த உலக மானுடபிறப்பின் மகிமை தெரியும்!
அகிம்சையால் விளையும் நற்கதி புரியும்!
அகிம்சையால் விளையும் நற்கதி புரியும்!
அன்புசெய் உன்னில், பிறனில்!
மனிதனுக்கு பன்முகமாகினும் இம்முகமே அழகு!!!
மனிதனுக்கு பன்முகமாகினும் இம்முகமே அழகு!!!
அன்புசெய் ஏனெனில் அனைத்து மதங்களும் போதிக்கும் உயர்ந்த மாண்பு அன்புசெய்!!!
பணத்தின் பின் ஓடுகின்ற ஓட்டத்தில்,
மனிதனின் பண்பில் புகைபடிந்திட்டது,
பார்வை மங்களாகிவிட்டது, படையெடுங்கள்,
துடைத்தெறிவோம் புகையை!
தூரிகை கொண்டு வர்ணம் பூசுவோம்!!!
புன்னகையாய் வாசம் வீசுவோம்!!!
மனிதனின் பண்பில் புகைபடிந்திட்டது,
பார்வை மங்களாகிவிட்டது, படையெடுங்கள்,
துடைத்தெறிவோம் புகையை!
தூரிகை கொண்டு வர்ணம் பூசுவோம்!!!
புன்னகையாய் வாசம் வீசுவோம்!!!
அனைவருக்கும் தெரியும் இன்றைய நவநாகரிக வாழ்க்கையில்
அன்புசெய்பவனே ஏமாளியாய், கோமாளியாய் தெரிகிறான்!
பிறர் நினைப்பதை எண்ணி பார்த்தால் இன்று எதுவும் சாத்தியமில்லை,
அன்புசெய்வான் எதிலும் தோற்கலாம் மனநிறைவில் இல்லை,
நிம்மதியில் என்றும் தோற்பானில்லை!!!
அன்புசெய்பவனே ஏமாளியாய், கோமாளியாய் தெரிகிறான்!
பிறர் நினைப்பதை எண்ணி பார்த்தால் இன்று எதுவும் சாத்தியமில்லை,
அன்புசெய்வான் எதிலும் தோற்கலாம் மனநிறைவில் இல்லை,
நிம்மதியில் என்றும் தோற்பானில்லை!!!
-செல்வா

No comments:
Post a Comment