செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 31 December 2017

நட்பதிகாரம்

ஓர் மடியில் பிறவா சகோக்கள் நாம்,
ஆனால் உன் அன்னையும் எனதே எனதும் உனதே!
நாம் பகிர்ந்த விசயங்கள் பல பல!
நான் எனும் அகம் துறந்தது உன்னிடம் மட்டுமே!
காலங்கள் கடந்தாலும் நாம் கழித்த நேரங்கள் மறவாது,
வாழ்க்கை பயணத்தில் எனக்கு வழிகாட்டும் மைல் கல் நீயாவாய்,
கஷ்டங்களில் தோள் கொடுத்து வெற்றிகளில் புன்னகைத்து உடன் பயணிக்கிறாய்,
வாழ்வில் எந்நிலைவரினும் நான் உனக்கு உனது நானாகவும் நீ எனக்கு எனது நீயாகவும் தெரிவோமாக,
நான் யார் என்பது உனது நடத்தையில் உலகறியும் என்பார் இவ்வுலகில்,
நமது லட்சியம் உனது வெற்றியில் நானும் எனது வெற்றயில் நீயும் பெருமிதம் கொள்வதே!!!
-செல்வா

No comments:

Post a Comment