வெற்றி விநாயகனே நிதம் உன்னை துதிப்பேன்,
கற்ற கல்வி, உற்ற உறவு, பெற்ற பேறு எல்லாம் நின்னருள்,
நித்தம் புதுவாழ்வு தந்து, நற்காரியம் பல செய்வித்து, பல்லுயிர் ஓம்பும் இப்பூவுலகில் எனக்கு வாழ்வளித்தாய்,
பாக்கியங்கள் பல பெறினும், வாக்கியத்தில் நின்பெருமை, செயல்களில் உன் உன்னதம், காண்பதில் நின்தாள்,
கேட்பதில் உன்மகிமை,
சிந்தனையில் நின்அருள்,
பெருகிட வல்லமை தாராய்!
என் கணபதியே! ஓம்! ஓம்! ஓம்!
கற்ற கல்வி, உற்ற உறவு, பெற்ற பேறு எல்லாம் நின்னருள்,
நித்தம் புதுவாழ்வு தந்து, நற்காரியம் பல செய்வித்து, பல்லுயிர் ஓம்பும் இப்பூவுலகில் எனக்கு வாழ்வளித்தாய்,
பாக்கியங்கள் பல பெறினும், வாக்கியத்தில் நின்பெருமை, செயல்களில் உன் உன்னதம், காண்பதில் நின்தாள்,
கேட்பதில் உன்மகிமை,
சிந்தனையில் நின்அருள்,
பெருகிட வல்லமை தாராய்!
என் கணபதியே! ஓம்! ஓம்! ஓம்!
-செல்வா

No comments:
Post a Comment