செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 15 December 2017

நெருக்கடியின் நெருடல்!!!




















நெருக்கடிகளின் மத்தியில் சிக்கித் தவிக்கும் சராசரி இளைஞன் நான்!
நெருக்கடியின் நெருடல்

நெருக்கடியின் நெருடல் மிகவும் அடர்த்தியாய் அழுத்துகிறது என்னை!

நெருடல்களினால் ஈரப்பதம் இழந்து காய்ந்த சருகானேன்! ஆனால்!!!

உரச! உரச! பற்றும் என்று ஒருபோதும் அறியேன்!

தன்னை தற்காக்க ஈரப்பசை ஒன்றே வழி அதனால் தான் ஏனோ விடாமல் கசிகிறது வியர்வை!

வழிகின்ற வியர்வை எல்லாம் விசும்பின் துளியே பக்குவமேனும் மரத்திற்கு நீராய்!!!

உளியின் அடியில் பாறை சிலையாகிறது! நெருக்கடியில் மனிதன் மாமனிதனாகிறான்!!!

நெருக்கடியுடன் நேரடியாக மோதுபவன் துணிந்தவன்!!!
துணிந்தவனுக்கே இவ்வுலகம் வசப்படும்!!!

விழித்திரு! விழைபடு!விண் முட்டும் விருட்சமாய் வளர்திடு!!!

-செல்வா...

1 comment: